ஞாயிறு, 28 டிசம்பர், 2008

ஞாபக சக்தியை அதிகரிக்கும் எளிய உணவு முறைகள்

ஞாபக சக்தியை அதிகரிக்கும் எளிய உணவு முறைகள்
கம்ப்யூட்டரில் இருப்பது போல மனிதனுக்கும் ‘மெமரி சிப்ஸ்’கள் உள்ளன. பெரும்பாலும் இந்த நினைவுக் காப்பங்களின் வலிமையும் எண்ணிக்கையும் பரப்பரைத்தன்மை உடலின் ஊட்டம் ஆகியவற்றைப் பொறுத்தே அமைகின்றன. மாவுச்சத்து வைட்டமின்கள் அமினோ அமிலங்கள் தாது உப்புக்கள் முதலியவையே இந்த ஊட்டத்தை நிர்ணயிக்கவல்லவை.

மனித மூளையில் 100 பில்லியன் நரம்பணுக்கள் உள்ளன. இவை உணவில் கிடைக்கும் வைட்டமின்களைப் பொறுத்து இரசாயன மாற்றங்கள் ஏற்படுத்தியபடி இருக்கின்றன.

ஒரு நாளைக்குப் பத்து இலட்சம் தடவைகளுக்கு மேல் நமது சிந்தனைகளை வகைப்படுத்தும் வேலையை மூளை செய்து கொண்டிருக்கிறது. தினசரி நம் உணவில் கிடைக்கும் (எரிக்கும்) மொத்தக் கலோரியல் முப்பது சதவிகிதத்தை மூளைதான் பயன்படுத்திக் கொள்கிறது. எனவே வயது வித்தியாசம் இன்றி மூளை நன்கு செயல்பட வேண்டும் எனில் இனிப்பு மற்றும் மாவுச்சத்துப் பொருட்களில் உள்ள குளுகோஸில் இருந்துதான் தேவையான சக்தி தொடர்ந்து கிடைக்க வேண்டும். இந்தச் சத்துணவில் குறைவு ஏற்படும் போது ஞாபக சக்தியிலும் சிக்கல் வந்துவிடுகிறது.

இது மட்டுமல்ல இரத்த ஓட்டம் தேவையான ஆக்ஸிஜனை மூளைக்கு விநியோகித்து புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதும் முக்கியமானது. தேவையான சத்துணவு கிடைக்காத போது மூளைக்கு ஆக்ஸிஜன் கிடைப்பது குறைந்த ஞாபகசக்தியில் குறைபாடு ஏற்படுகிறது.

இதைத் தடுக்க சிறந்த உணவு முறையையே மருந்தைப்போல் பயன்படுத்தினால் புத்திக்கூர்மையும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

ஞாபக சக்தி குறைவாக இருப்பவர்கள் பைரிடாக்ஸின் என்ற வைட்டமின் அதிகம் உள்ள பாதாம் பருப்பு சோயா பீன்ஸ் முதலியவற்றை நன்கு உணவில் சேர்க்க வேண்டும். இது நம் உடலில் சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய உப்பு வகைகளை சமன் செய்து உடலை கட்டுப்பாட்டில் வைக்கிறது. இத்துடன் பி12 வைட்டமினை உடல் ஏற்றக் கொள்ளவும் உதவுகிறது.

தேவையான அளவு ஆழ்ந்து சிந்தித்துச் செயல்பட பாலிக் அமிலம் அதிகம் உள்ள தண்டுக்கீரை கொண்டைக்கடலை முதலியவற்றை சேர்த்துக் கொள்வது அவசியம்.

பால்இ தயிர் மற்றும் அசைவ உணவு வகைகளால் பி12 கிடைப்பதால் சோம்பேறித்தனம் குறையும். சைவ உணவுக்காரர்கள் பி12ஐ ஊசியாகப் போட்டுக் கொள்ளவும்.

அரிசி கோதுமை கேழ்வரகு மேற்கண்ட உணவு வகைகளுடன் இரும்புச்சத்து நிறைந்துள்ள பேரிச்சம்பழம் பட்டாணி முதலியவற்றையும் தினமும் உணவில் சேர்த்து வந்தால் நரம்புமண்டலம் அமைதியாகி மூளை சுறுசுறுப்பாக இருக்கும். இது சிந்தித்து செயல்படுவதில் அக்கறை காட்டத் தூண்டிக் கொண்டே இருக்கும். இந்த உண்மைகளை போஸ்டனின் டப்டஸ் பல்கலைக் கழகமும் வேல்ஸின் ஸ்வான்ஸீ பல்கலைக்கழகமும் பல ஆண் பெண்களையும் பரிசோதனை செய்து கண்டுபிடித்தன.

எல்லா வயதுக்காரர்களும் கூர்மையாகச் சிந்திக்க அரிசிஇ பருப்பு மற்றும் பழவகைகளைத் தவிர்த்துவிடாமல் உணவில் சேருங்கள்.

ஞாபக சக்தியை அதிகரிக்கும் எளிய உணவு முறைகள்
ஆரஞ்சு கொய்யா திராட்சை ஆப்பிள் வாழைப்பழம் முலாம்பழம் பேரீச்சம்பழம் காரட் அன்னாசி காலிபிளவர் முட்டைக்கோஸ் பசலைக்கீரை கொத்துமல்லி முருங்கைக்கீரை பச்சைப் பட்டாணி பால் தயிர் ஈரல் போன்ற உணவு வகைகளில் உள்ள பீட்டா கரோட்டின் வைட்டமின் சி இரும்புச்சத்து முதலியன ஞாபக சக்தியை அதிகரிக்க வல்லவை.

இனிப்பு வகைகளைச் சாப்பிடுவதால் அசிட்டியல்சோலைன் என்ற பொருளை மூளை நரம்புகள் வெளியேற்றுகின்றன. இதனால் ஞாபசக்தி அதிகரிக்கிறது. குளுகோஸ் சாப்பிடுவது நன்று. இல்லையெனில் மாதம் ஒரு நாள் கோதுமை அல்வா சாப்பிடலாம். இதில் சோலைன் அதிகம் இருக்கிறது. ஆனால் முடிந்தவரை இயற்கை இனிப்புகளையே விரும்புங்கள். செயற்கை இனிப்புத் தேவை இல்லை. ஆக ஞாபகச் சக்தியையும் சிந்தனைத் தெளிவையும் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவின் மூலம் எளிதில் அதிகரித்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

Posted by sari

தலைமுடி உதிர்கிறதா





அளவுக்கதிகமான வெய்யில், உப்புக்காற்று, குளோரின் கலந்த தண்ணீர், போதிய அளவு தூக்கம் மற்றும் ஓய்வு இல்லாமை, கூந்தலுக்கு அடிக்கடி செய்கிற கலரிங், ஸ்ட்ரெயிட்னிங் பேர்மிங் சிகிச்கைள், அதிக சூட்டில் கூந்தலை ப்ளோ ட்டிரை செய்வது, உடல் நலக்கோளாறு, திடீர் அதிர்ச்சி, தைரோய்ட் போன்ற பல பிரச்சினைகளுக்காக உட்கொள்ளும் மருந்துகள், மன உளைச்சல், கோபம், அதிக படபடப்பு டயட் சரியாக இல்லாமல் இருப்பது, தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் ஏதேனும் பாதிப்புகள், கீமோதெரபி, மற்றும் டேயோ தெரபி போன்ற சிகிச்சைகள், இரும்பு சத்து குறைவான உணவுகள், கூரிய முனைகள் கொண்ட சீப்பினால் தலை சீவுவது, செரிமானக் கோளாறுகள் இருப்பவர்களுக்கு கூந்தல் தொடர்பான பிரச்சினைகள் அதிகம் இருக்கும். இவை அனைத்தும் முடி செழிப்பாக இல்லாமல் இருப்பதற்கும், முடி கொட்டுவதற்கும் சில காரணங்கள்.

ஒரு மாதத்தில் ஒரு முடியானது, அரை அங்குலம் வளர்கிறது, வெயில் நாட்களில் வேகமாகவும், குளிர் நாட்களில் மெதுவாகவும் இந்த வளர்ச்சி இருக்கும். பிறக்கும் போதே நம் மண்டையில் எத்தனை முடிகள் இருக்கப்போகின்றன என்பது தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. சராசரியாக நம்முடைய மண்டையில் 1,20,000 முடிகள் இருக்கும். தினம் 100 முடிகள் வரை உதிர்வது. சகஜமானது. நம் மண்டையின் வெளிப்பகுதியில் நம் பார்வையில் படுகிற முடி உயிரற்றது. அதற்கு இரத்தமோ, நரம்புகளோ, தசைகளோ கிடையாது. ஆனாலும் ஆரோக்கிய முடி 30 சதவீத நீளத்துக்கும், 14 சதவீத விட்டத்துக்கும் நீண்டு, விரிந்து கொடுக்கக்கூடியது என்பது விசித்திரமான தகவல்.

சரியான சத்தான சாப்பாடு இல்லாமல் எப்படிப்பட்ட விலை உயர்ந்த ஷாம்போ மற்றும் ஒயில்களாலும் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க முடியாது. முடி அதிகம் கொட்டுவோர் பசும்பால் தயாரிப்புகள், கஃபைன், கோலா, சொக்லேட் சீனி, உப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை குறைக்க வேண்டும். பி விட்டமின், மீன் எண்ணெய் பீட்டா கேரட்டின், விட்டமின் சி மற்றும் விட்டமின் ஈ தாதுப் பொருட்கள் செலேனியம் மற்றும் துத்தநாகச் சத்துக்கள் நிறைந்த உணவுகள் அதிகம் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

தலைமுடியின் அவசியத்தையும் அதை பாதுகாக்கும் முறையையும் நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும். இளமை நிரம்பிய சரியான விகிதச் சத்துக்களைப் பெற்ற இரத்தத்தினால் தான் தலைமுடி கருப்பான நிறத்தைப் பெற்றுள்ளது. உடலில் உள்ள இரத்தம் போதுமானதாக இல்லையென்றாலோ, சுண்டிப் போனாலோ சரியான விகிதச் சத்துப் பொருள்களை இரத்தம் இழந்திருந்தாலோ நோய் எதிர்ப்புச் சக்திக் குறைந்தாலோ, வயதானாலோ முடி தன் கருமை நிறத்தை இழந்து விடுகிறது. உடல் பலவீனமடைந்தால் எவ்வாறு உடல் வெளுத்துப் போய்விடுகின்றதோ அதே போல மயிரும் வெளுத்துப் போய் விடுகிறது. மயிர் வெளுக்க இன்னும் நிறைய காரணங்களும் உண்டு.

முடி உதிரும் காரணம்

எப்போது மயிரின் அடிப்பாகத்தில் மண்டைக்குள் புதைந்திருக்கக்கூடிய வேர்கள் பலவீனமடைகின்றனவோ அப்போது மயிர்க் கால்கள் பலமிழந்து நிற்க முடியாமல் கீழே விழுந்து விடுகிறது. முடி எக்காரணம் கொண்டாவது அசுத்தம் அடைந்தால் முடியானது உதிர ஆரம்பிக்கும். மிகவும் குளிர்ந்த நீர், மிகவும் உஷ்ணமான நீர் ஆகியவற்றால் முடியை அலசினால் முடி உதிர ஆரம்பிக்கும். தலை குளித்து விட்டுச் சரியாகத் துவட்டாமல் விட்டு அதனால் நீண்ட நேரம் ஈரம் தலையில் தேங்கி நின்றால் முடி உதிரும். தலைகுளித்து விட்டு ஈரம் உலராமலிருக்கும் போதே எண்ணெய் வைத்து வாரிக் கொண்டால் முடி உதிரும் சிலர் தலை முடி நன்றாக வளர வேண்டும் என்பதற்காகவும் முடி உதிரக்கூடாது என்பதற்காகவும், கண்ட கண்ட எண்ணெய்களையும் தொலைக்காட்சிகளில் காட்டப்படும் தைலங்களையும் வாங்கி உபயோகிக்கின்றனர். இதனால் எங்களுக்குச் சரியான பலன்கள் ஏற்படவில்லையே என்று கூறுகின்றனர், எல்லோருக்கும் எல்லா எண்ணெய்களும் வேலை செய்வதில்லை, நன்றாக பிரச்சினைகளை ஆராய்ந்து எதனால் என்பதை புரிந்து வைத்தியம் செய்தால் கண்டிப்பாக முடி கொட்டுவது நின்று முடியும் வளரும்.

தலை முடி உதிர்ந்து விடுதல், தலை முடி போதிய வளர்ச்சி பெறாமை, தலை முடியின் நிறம் மாறி வெளுத்துப்போதல், தலையில் மெல்ல மெல்ல வழுக்கை உண்டாகுதல், தலை முடியின் நடுவில் அங்கங்கே சொட்டை விழுதல், தலை முடியில் பொடுகு, ஈறு, பேன் போன்றவை பல்கிப் பெருகுதல், தலையில் பக் போடுதல் சில சமயங்களில் முடிகளின் நடுவே புண் உண்டாக்கி விடும்.

உலகின் முதலாவது முழுமையான செயற்கை இருதயம்


விலங்கு இழையங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உலகின் முதலாவது முழுமையான செயற்கை இருதயம்
மனிதனின் சொந்த இருதயத்தையொத்த செயற்பாடுகளைக் கொண்ட செயற்கை இருதயமொன்றை பிரான்ஸ் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இருதய இயக்கம் பாதிக்கப்பட்ட, இருதய மாற்று சிகிச்சையொன்று சாத்தியமற்ற நோயாளிகளுக்கு இந்த செயற்கை இருதயமானது வரப்பிரசாதமாக அமையும் என மேற்படி ஆய்வுக்குத் தலைமை தாங்கிய பிரான்ஸின் பிரபல இருதய சத்திர சிகிச்சை நிபுணரான மருத்துவ கலாநிதி அலெய்ன் கார்பென்ரியர் தெரிவித்தார்.

கடந்த 15 வருடகால ஆராய்ச்சியின் பயனாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கை இருதயம் தொடர்பாக விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் மாநாடு பாரிஸில் இடம்பெற்றது. ""உயிரியல் இரசாயன இழையங்களைப் பயன்படுத்தி முழுமையான செயற்கை இருதயம் உருவாக்கப்படுவது உலகில் இதுவே முதற்றடவையாகும்'' என மேற்படி இருதயத்தை உருவாக்கியுள்ள உயிரியல் மருத்துவக் கம்பனியான "கார்மட்' இன் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் பற்றிக் கொலம்பியர் தெரிவித்தார்.

""இந்த உயிரியல் இரசாயன இழையங்களானது விலங்குகளின் இழையங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டமையால் அவற்றை மனித உடல் நிராகரிப்பதற்கான வாய்ப்பு குறைவாகவுள்ளது'' என அவர் கூறினார். கார்மட் நிறுவனமானது, பொது மற்றும் இராணுவ பாவனைக்கான விமானங்கள், எறிகணைகள், விண்கலங்கள் என்பனவற்றை உருவாக்கி சந்தைப்படுத்தி வரும் விண்வெளி மற்றும் விமானப் பாதுகாப்பு கம்பனியால் ஸ்தாபிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேலும் 15 புதிய செயற்கை இருதயங்களை உருவாக்க கம்பனி திட்டமிட்டுள்ளது. இந்த இருதயங்களை எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் மனிதர்களுக்கு பொருத்தும் பரீட்சார்த்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 1980 களிலிருந்து செயற்கை இருதயங்களை உருவாக்குவதற்கான அநேக ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அவற்றில் அநேகமானவை இருதய மாற்று அறுவைச் சிகிச்சை வரை நோயாளியின் உயிரை தக்க வைப்பதற்கு உபயோகிக்கப்பட்டன.

எனினும், அவை எதுவுமே நீண்டகால அடிப்படையில் மாற்று இருதயமாக இயங்கும் வல்லமையைக் கொண்டிருக்கவில்லை. அந்த செயற்கை இருதயங்களைப் பொருத்துவதால் ஏற்படும் ஒவ்வாமை எதிர் விளைவுகள் மற்றும் குருதி உறைதல் போன்ற பிரச்சினைகள் காரணமாகவே அவற்றினை நோயாளிக்கு நிரந்தரமாக உபயோகிப்பது சாத்தியமற்று இருந்தது. ஆனால், இப்புதிய மிருக இழையங்களால் உருவாக்கப்பட்ட செயற்கை இருதயமானது குருதி உறையும் அபாயம் குறைந்தது என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

சனி, 27 டிசம்பர், 2008

மனித உடல் - இறைவனின் அற்புதம்!

இவ்வுலகில் எண்ணற்ற படைப்புகளை இறைவன் படைத்திருந்தாலும் அவற்றில் மனிதனை ஓர் உன்னதமான, உயர்ந்த, சிறந்த படைப்பாக இறைவன் படைத்துள்ளான்.

மனிதனைச் சிறந்த படைப்பென்று கூறியிருப்பதற்கு எண்ணற்ற காரணங்கள் இல்லாமலில்லை. மனித உடலிலுள்ள ஒவ்வொரு பகுதியும் அற்புதத்தை எடுத்து பறைசாற்றிக் கொண்டுதான் இருக்கின்றன. அவற்றுள் ஒருசிலவற்றை இங்குக் காண்போம்.

கண்கள்:


கண் என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஓர் உறுப்பு ஆகும். மனிதனுக்கு இறைவன் இரண்டு கண்களைக் கொடுத்திருக்கிறான். உலகத்தை, வானத்தை, கடலை, ஆறுகளை, மலைகளை என எண்ணிலடங்கா படைப்புகள் அனைத்தையும் இந்த இரண்டு கண்கொண்டு பார்த்து மனிதன் உணர்கிறான். கண்ணின் அருமை குறித்து இரண்டு கண்ணும் இல்லாத ஒரு மனிதரிடம் கேட்டால்தான் தெரியும். உடலிலுள்ள எந்த உறுப்பை வேண்டுமானாலும் இழக்கத் தயாராக இருக்கக்கூடிய மனிதன், தன் கண்ணிற்குப் பகரமாக பல கோடிகள் கொடுத்தாலும் கொடுக்க முன்வர மாட்டான் என்பது தெள்ளத்தெளிவான உண்மை.

காது:


கண்ணால் கண்டு காட்சிகளை எப்படி அறிந்துக் கொள்ளுகின்றோமோ அதேபோன்று காதுகளையும் அற்புதமாகவே படைத்துள்ளான். மனிதர்கள் பேசக்கூடிய பேச்சுகள் தொடங்கி, குயில்கள் கூவுகின்ற இனியமான ஓசை வரை எத்தனையோ விதமான சப்தங்களை அறிந்து வைத்துக் கொண்டு, எத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னரும் இது இன்னாரின் குரல் அல்லது இது இந்தப் பறவையின் அல்லது விலங்கின் குரல்கள் என்று மனிதன் பிரித்தறிகின்றான் என்றால் அது இறைவன் வழங்கியுள்ள இரண்டு காதுகளின் அற்புதமல்லவா?

நாக்கு:


நாவானது, வாயின் அடியில் எலும்போடு இணைக்கப்பட்ட எலும்புத்தசை என்னும் வகையைச் சேர்ந்த இளஞ்சிவப்பு நிறத் தசை ஆகும். இது வாயில் இடும் உணவைப் பற்கள் மெல்லுவதற்கு வசதியாக நகர்த்தியும் புரட்டியும் திருப்பியும் தரும் உறுப்பு. மென்ற உணவை விழுங்கி உணவுக் குழாய்க்குத் தள்ளுவதும் நாக்கே. உணவின் சுவையை உணரும் முதன்மையான உறுப்பு நாக்காகும். நாக்கின் மேற்புறத்தில் சுவையுணர் நுண்புடைப்புகள் பல உள்ளன. வாயில் ஊறும் உமிழ் நீரினால் நாக்கு எப்பொழுதும் ஈரமாக உடலில் உள்ள தசைகளில் நாக்கு வலிமையான தசைகளில் ஒன்று. நாக்கு பலவாறு வளையவல்லது, எனவே வெவ்வேறு வகையான ஒலிகள் எழுப்பி மொழி பேசுவதற்கும் நாக்கு மிகவும் துணை செய்கின்றது. இவ்வுலகில் தோன்றிய, பேசப் படுகின்ற அத்தனை மொழிகளும் நாவினால்தான் பேசப் படுகின்றன.

உடம்பிலேயே தொடு உணர்ச்சி மிக்க உறுப்பு நாக்கின் நுனி ஆகும். நாக்கின் மேற்புறத்தில் உள்ள நுண்புடைப்புகளில் நான்கு வகையான நுண்புடைப்புகள் உள்ளன. சுவையுணர் நுண்புடைப்புகளுக்கு நாமுடிப்பு என்று பெயர். நாமுடிப்புகளின் அமைப்பைப் பொருத்து அவை இனிப்பு, புளிப்பு, கசப்பு, கரிப்பு, உவர்ப்பு ஆகிய ஐந்து வகையான சுவைகளைத் தனித்தனியாகவும் கூட்டாகவும் உணரக்கூடிய விதத்தில் இறைவன் படைத்துள்ளானே இது இறைவனின் அற்புதப் படைப்பல்லவா?

அண்மைக்காலம் வரையிலும் நாவின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு சுவைகளை உணர்வதாகப் பாடநூல்களில் இருந்து பொதுஅறிவுக் கட்டுரைகள் வரை தவறாகவே எழுதப்பட்டு வந்தது. தனித்தனிச் சுவைகளை உணர நாவினில் தனியான இடங்கள் ஏதும் இல்லை.

பல்:


அடுத்ததாகப் பற்கள். நாம் உண்ணக்கூடிய உணவினைப் பற்களின் மூலம் அசைபோட்டு நம் குடலுக்குச் செலுத்துவதில் பற்கள் தலையாய பணியைச் செய்கின்றது. மனிதர்களுக்கு இருதடவைகள் பற்கள் முளைக்கின்றன. குழந்தைகளுக்குப் பற்கள் ஆறு மாத வயதில் முளைக்கத் தொடங்குகின்றன.

வாய்:


பொதுவாக வாயின் பயன்பாடு உணவு, நீர் இவைகளை உட்கொள்ளுதலாகும்.

முகம்:


முகம் தலையின் முன்பகுதி ஆகும். மனிதரில் நெற்றி முதல் நாடி வரையான பகுதிகள் இதிலடங்கும். நெற்றி, கண்ணிமை, கண்கள், மூக்கு, கன்னம், வாய், நாடி ஆகிய பகுதிகள் மனித முகத்திற் காணப்படுகின்றன. மனிதரை அடையாளங் காண முகங்களே பொதுவாகப் பயன்படுகின்றன. இருவரின் முகங்கள் முழுஒத்தத் தோற்றம் கொண்டிருப்பதில்லை. ஆதலால் அடையாள அட்டைகளில் முகத்தின் புகைப் படங்களே பயன்படுத்தப்படுகின்றன. உலகத்தில் தற்பொழுது வாழக்கூடியவர்களில் எத்தனையோ கோடி மனிதர்களின் முகமும், இதற்கு முன்னர் வாழ்ந்து மறைந்தவர்களின் முகமும் முழுமையான ஒத்த தோற்றத்தைக் கொண்டிருக்கவில்லை. பேச்சின்றி உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் முக பாவம் முக்கியப் பங்காற்றுகின்றது.

மூக்கு:


வாசனை திரவியங்கள் தயாரிக்கின்ற அல்லது விற்கப்படுகின்ற பகுதியின் பக்கம் சென்றோம் என்றால் நாம் அந்த இடத்தை அடைவதற்கு முன்னமே நம்முடைய மூக்கின் நுகரக்கூடிய சக்தியின் மூலம் அந்த வாசனை பற்றிய செய்தியை அறிந்து கொள்கிறோம். அதேபோன்று துர்நாற்றம் வீசக்கூடிய பகுதிக்குச் சென்றால் அந்தப் பகுதியை அடைவதற்கு முன்னாலேயே அதன் துர்நாற்றத்தை அறிந்து நமக்கு எச்சரிக்கை கொடுக்கின்றது நம்முடைய மூக்கு. மேலும் கண் தெரியாத மற்றும் காது கேளாதவரையும் அந்த வாசனை மூக்கின் உதவியை கொண்டு நுகர வைக்கின்றது.

கைகள்:


நமக்கு இரண்டு கைகளைக் கொடுத்து, அவற்றின் மூலம் எத்தனை விதமான வேலைகளை நாம் செய்து முடிக்கிறோம். தற்பொழுது தட்டச்சு மூலம் இந்தக் கட்டுரையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றேனே இதுவும் கைகளினால் செய்யப் படும் அற்புதமல்லவா? நாம் உண்ணுவதற்கும் உடுத்துவதற்கும் இன்னும் இயற்கை தேவைகளை முடித்துவிட்டு சுத்தம் செய்வதற்கு எனப் பல்வேறு பணிகளை கைகளினால் நிறைவேற்றுகிறோம் அல்லவா!

விரல்கள்:


நம்முடைய கைகளில் இருக்கக்கூடிய விரல்களைப் பற்றி நாம் என்றாவது சிந்தித்ததுண்டா? விரல்களில் உள்ள ரேகைகள் பற்றி எண்ணியதுண்டா? பக்கத்திற்கு ஐந்து விரல்களைக் கொண்ட நம் விரல்களில், ஒரு விரலில் உள்ள ரேகையைப் போன்று அடுத்த விரலில் இருப்பது கிடையாது. ஐந்து விரல்களின் ரேகைகளும் ஐந்து விதமானது என்பது நம்மில் எத்தனை பேர் அறிந்து வைத்து அதற்காக நாம் நன்றி செலுத்தியுள்ளோம்? உதாரணமாக நாம் வேலை செய்யக்கூடிய இடங்களில் வருகைப் பதிவை அறிவதற்காக வேண்டி நம் கை விரல்களின் ரேகையை பதிவு செய்து அதனைக் கொண்டு நமது தினசரி வருகையை அறியும் புதுமுறை பரவலாக அறிமுகப் படுத்தப் பட்டு வருகிறது. நம்மில் யாராவது ஒருவரின் கை விரல் ரேகை மற்றவரின் கை விரல் ரேகையோடு ஒத்துப் போயிள்ளது என்று கேள்விப் பட்டதுண்டா?

கால்கள்:


கால் என்பது உடலைத் தாங்குவதற்கும் நடப்பதற்கும் பயன்படும் உடல் உறுப்பாகும். அன்றாடம் நாம் தூங்கி விழித்தது முதல் மறுபடியும் தூங்கப் படுக்கைக்குச் செல்லும்வரை எவ்வளவு தூரங்களைக் கடக்கிறோம்? விபத்தில் கால் இழந்தவர்கள் அல்லல்படுவதைக் கண்டால் கால்களின் அருமை தெரியும்.

மூளை:


மனிதமூளை என்பது மையநரம்புத் தொகுதியினுடைய மையமும் சுற்றயல் நரம்புத் தொகுதியினுடைய அடிப்படைக் கட்டுப்பாட்டு நிலையமுமாகும்.

மனிதமூளை, சிக்கல் தன்மை குறைந்ததும் பிரக்ஞை இன்றியும் நிகழும், மனிதரின் அனிச்சை செயற்பாடுகளான சுவாசம், சமிபாடு, இதயத்துடிப்பு போன்ற செயற்பாடுகளையும், பிரக்ஞையுடன் நிகழும் சிந்தனை, புரிதல், தர்க்கம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது.

மற்றைய எல்லா உயிரிகளையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளைச் சிறப்பாகக் கையாளும் திறனை மனித மூளை பெற்றிருக்கிறது. உலகில் இதுவரை மனிதர்கள் கண்டுபிடித்த அத்தனை அறிவியல்களிலும் மனித மூளையில் 10% மட்டுமே பயன் படுத்தப் பட்டிருக்கிறதாம்.

இதயம்:


இதயம் என்பது முதுகெலும்புகளில் காணப்படும் ஒரு தசையாலான ஓர் உறுப்பாகும். இதன் வேலை இரத்தத்தைக் குருதிக் குழாய்களின் வழியாகச் சுழற்சி முறையில், சீரான வேகத்தில் உடல் முழுவதும் செலுத்துவது ஆகும். இதயமானது இதயத்தசை என்னும் சிறப்புத் தசையால் ஆனது.

இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு வரும் குழாய்கள் சிரைகள் எனவும் இதயத்தில் இருந்து உடலின் மற்ற பாகங்களுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்கள் தமனிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இதயமானது பெரிகார்டியல் நீர்மம் என்னும் நீர்மத்தினால் சூழப்பட்டுள்ளது. இந்நீர்மமானது இதயத்தை அதிர்ச்சிகளில் இருந்தும் இதயம் சுருங்கி விரியும் போது மற்ற பாகங்களுடன் உராய்வதைத் தடுக்கவும் உதவுகிறது.

மனித உடலில் இதயமானது மார்பின் இடப்பகுதியில் மார்பு எலும்புகளுக்குப் பின் பகுதியில் அமைந்துள்ளது. இடப்பகுதியில் இடது நுரையீரலானது வலது நுரையீரலை விடச் சிறியதாக இருக்கிறது. மிக மிகச் சிலருக்கு வலப்புறம் இதயம் அமைந்திருப்பதாகச் சொல்லப் படுகிறது.

இதயத்தின் வலப் பக்கப் பணியானது, அசுத்த இரத்தத்தைச் சேகரிப்பது ஆகும். அசுத்த இரத்தமானது வலது ஆரிக்கிளை அடைகிறது. பின் இது வலது வெண்ட்டிரிக்கிள் வழியாகக் குருதி நுரையீரல்களுக்கு அனுப்பப் படுகிறது. இங்கு கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றப்பட்டு இரத்தத்தில் ஆக்ஸிஜன் கலக்கிறது.

இதயத்தின் இடப்புறமானது தூய இரத்தத்தைப் பெறுகிறது. இது இடது ஆரிக்கிளை அடைகிறது. இங்கிருந்து குருதியானது இடது வெண்ட்டிரிக்கிளை அடைந்து அங்கிருந்து உடல் முழுவதற்கும் அனுப்பப் படுகிறது.

இதயத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள வெண்ட்டிரிக்கிள்கள் மேலே உள்ள ஆரிக்கிள்களை விடத் தடிப்பாக அமைந்து இருக்கின்றன. அதிலும் இடது வெண்ட்டிரிக்கிளானது இரத்தத்தை உடல் முழுவதும் செலுத்த அதிக வேகம் தேவைப்படுவதால் வலது வெண்ட்டிரிக்கிளை விடத் தடிப்பாக உள்ளது.

கிட்னி:


கிட்னியின் தலையாய பணியை அறிந்து கொண்டால் இறைவன் மனித உடலில் அற்புதங்களை நிறைவாக கொடுத்திருக்கின்றான் என்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம். ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளைப் பிரித்து, சிறுநீருடன் அனுப்புவதுதான் சிறுநீரகத்தின் (கிட்னி) வேலை. நாம் தினசரி குடிதண்ணீரில் தொடங்கி எத்தனை விதமான குடிபானங்களை குடித்துக் கொண்டிருக்கிறோம். அத்தனை பானங்கள் மூலம் பெறக்கூடிய சத்துகளை இரத்தத்துடன் கலந்து நம் உடலுக்குத் தேவையான ஆரோக்கியத்தைக் கொடுத்து தேவையற்ற கழிவுகள் சிறுநீரகத்தின் உதவியால் வெளியேறுகிறது. இந்த செயல்கள் முறையாக அன்றாடம் நமக்கு நடந்தேறிக் கொண்டிருக்கிறது,

நுரையீரல்:


நுரையீரல் என்பது உயிரினங்கள் மூச்சுக் காற்றை இழுத்து வெளிவிடும் ஒரு முக்கிய உறுப்பாகும். மூச்சுக் காற்றை இழுத்து விடுதலுக்கு மூசுதல் என்று பெயர். வாயுப்பறிமாற்றம் இவ்வுறுப்பின் முக்கிய பணியாகும். மேலும் சில முக்கிய வேதிப் பொருட்களை உற்பத்தி செய்வதும் வேறு சில வேதியல் பொருட்களை செயலிழக்க செய்வதும் நுரையீரலின் பணியாகும்.

காற்றில் உள்ள ஆக்ஸிஜனை (உயிர்வளி, பிராணவாயு) இரத்ததில் சேர்ப்பதும் இரத்ததில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடை (கரிமக்காடி வளிமம் கரியமிலவாயு)வைப் பிரித்து உடலிலிருந்து வெளியேற்றுவதும் நுரையீரலின் முக்கிய பணியாகும்.

மூச்சு இழுத்துவிடுதல் தவிர இதர பணிகள் வாயுப்பறிமாற்றம் தவிர நுரையீரல் வேறு சில பணிகளையும் செய்கிறது

இருதயத்திற்கு இரு புறமும் பாதுகாப்பாக இருப்பது, இதயத்தை அதிர்வுகளில் இருந்து காப்பது, சிரைகளில் ஏற்படும் இரத்தக் கட்டுகளை உடலின் பிற பகுதிகளுக்குச் செல்லாமல் தடுப்பது, சில முக்கிய வேதிப் பொருட்களை உற்பத்தி செய்வது, வேறு சில வேதிப் பொருட்களை செயலிழக்க செய்வது போன்றவை நுரையீரல் செய்யும் பணிகளாகும்.

முடிகள்:


நம் உடம்பில் முடியைக்கூட மிகவும் நேர்த்தியான, ஒழுங்கான அமைப்பில் அமைத்திருக்கின்றான். அதாவது மனித உடலில் பல்வேறு இடங்களில் முடிகள் முளைத்தாலும் ஒவ்வொன்றிற்கும் அளவு உள்ளது. அவ்வாறு அளவுகள், வரையரைகள் இல்லையென்றிருந்தால் தலையில் மற்றும் முகத்தில் முளைக்கக்கூடிய முடியின் அளவுபோல் கைகளிலும் கால்களிலும் இன்னும் உடம்பு முழுவதும் முளைக்குமேயானால் தோல்களை காணமுடியாத முடி கொண்ட மனிதனைத்தான் காண நேரிடும். உடம்பிலுள்ள முடிகளுக்கென்ற ஒரு வளரும் படிநிலை, தலை மற்றும் தாடைபகுதிகள் என்று வேறொரு வளரும் படிநிலைகளை இறைவன் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதால் மனிதன் சகஜமாக நடமாட முடிகிறது. இதுவெல்லாம் இறைவன் மிகப்பெரிய அற்புதமல்லா?

ஆக இறுதியாக மனித உடல்களில் எண்ணற்ற உடல் உறுப்புகள் இருந்தாலும் ஒவ்வொரு உறுப்புகளும் ஒவ்வொருவிதமான அற்புதங்களை அள்ளிக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதில் யாருக்கும் மாற்ற கருத்து இருக்க முடியாது என்பதோடு மனித உடல்கள் இறைவன் அற்புதம் என்று முடிக்கிறேன்.

இறைவன் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்.


ஆக்கம்: அபூரம்லா
நன்றி

கறிவேப்பிலை

வாசனைக்காக இந்திய உணவில் சேர்க்கப்படும் கறிவேப்பிலை ஆரம்ப நிலையில் உள்ள புற்று நோயை கட்டுப்படுத்தி கொல்லும்.
நமது மக்கள் கறிவேப்பிலையை மட்டும் எடுத்து தனியே எடுத்து ஒதுக்கி விடுவார்கள்.இந்தியர்களுக்கு வீச தெரிந்த கறிவேப்பிலையை ஆஸ்திரேலியர்கள் உணவியல் நிபுணர்கள் காசாக்க முற்பட்டுவிட்டார்கள்..

nutritionn scintist of cresro ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய ஆராச்சி நிறுவனம்.இந்த
நிறுவனம் அண்மையில் மாசாலா பொருட்களின் தன்மையை ஆராய்ந்ததில் இந்த உண்மை வெளியாகியுள்ளது.கறிவேப்பிலையிலுள்ள இராசயன தன்மைகள்தான் இதற்கு காரணம் என அறியப்படுகிறது.ஞாபக சக்தியை கூட்டும் வல்லமையும் இதற்க்கு உண்டு.இவ்வளவும் வெள்ளைகாரன் சொன்னால்தான் நமக்கு மண்டையில் ஏறும்...

நா

மருத்துவ கலைச்சொல்

பெண் பிறப்புறுப்பின் பின் பகுதி-cervix
கருப்பை- Uterus
சீதம் ,சளி-Mucous
பூஞ்சை காளன் தொற்று நோய்- fungal infection
வீக்க நோய்-Inflamation
பெண்ணின் பிறப்புறுப்பு, யோனி- Vagina
மண்ணீரல்- spleen
இருதயம்- heart
கணையம் - Pancreas
கணைய நீர் -Insulin
இரத்தத் தட்டு- Platelate
சுரப்பி சுரக்கும் இயக்குநீர் -hormone
மாதவிடாய் நிறுத்தம்-menopause
உடல் பருமன் சுட்டு (Body Mass Index)
உணவு வழிகாட்டி கூர்நுனிக்கோபுரம் (Food Guide Pyramid)
பரிமாறும் அளவுகள் (Servings)
ஆரோக்கிய உணவு (Healthy food)
ஆறு சுவைகள் (six tastes)
நுட்பியல் Tecnology

வெள்ளி, 26 டிசம்பர், 2008

புத்தாண்டு வாழ்த்துகள் 2009

புத்தாண்டு வாழ்த்துகள்
இந்த புத்தாண்டில் நீங்கள் என்ன செய்ய திட்டமிட்டுள்ளீர்கள்?உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள இப்போதே விதை ஊன்றுங்கள், பிறகு ஆகாரங்களை மாற்றி அமைத்து ஆரோக்கியம் எனும் வேரை பலப்படுத்துங்கள்.ஆகாரமே ஔடதம் எனும் கோட்பாட்டை அனுசரித்து ,தேவையற்ற கொழுப்பு பொருட்களை அகற்றி நமது ஜீவாதார கருவிகளை பலப்படுத்தும் ,காய்,கனி,பட்டை வேர் இலை தளை யாவும் உண்டு நல்வாழ்வு பெறுங்கள்
கஷாயமே சித்தர் ஔடதம்.நோய் நீங்கி பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

புத்தாண்டு வாழ்த்து

மலேசிய மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்
----------------------------------------
இந்த புத்தாண்டில் என்ன செய்ய திட்டமிட்டுள்ளீர்கள்? நீங்கள் ஆரோக்கியமாக வாழும் எண்ணம் உங்கள் மனதில்

ஞாயிறு, 21 டிசம்பர், 2008

சித்த வைத்தியம்

சனி, 20 டிசம்பர், 2008

சித்த வைத்தியர்

சித்த வைத்தியம்

உலகத்தில் பல விதமான வைத்திய முறைகள் பயன் பட்டு வருகின்றன. அவை சித்த வைத்தியம், ஆயுர்வேதவைத்தியம், யூனானி வைத்தியம், அலோபதி வைத்தியம், ஹோமியோபதி வைத்தியம், இயற்கைவைத்தியம் எனப்படும். இவற்றுள் மிக தொன்மை வாய்ந்தது, சித்த வைத்தியம்.மற்ற வைத்தியங்கள் எப்போது தோன்றின என்று வரையறுத்து கூற முடியும். ஆனால், சித்த வைத்தியம்எப்போது தோன்றியது என்று வரையறுத்து கூற இயலாது. சித்த வைத்தியம் தமிழ் நாட்டில் வாழ்ந்தசித்தர்களால் உருவானது. அது பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது.நாட்டு வைத்தியம், வீட்டு வைத்தியம் என்பன , எளிமையாக்கப்பட்ட சித்தவைத்தியமாகும்.மொகலாயர் ஆட்சிக் காலத்துக்குப் பின்தான், யூனானி வைத்தியம் பரவியது.ஆங்கில ஆட்சியின் போது அலோபதி என்னும் ஆங்கில வைத்தியம் பரவியது.ஹோமியோபதி வைத்தியம் ஜெர்மானியரால் உருவாக்கப்பட்ட வைத்தியம்.சித்த வைத்தியம் தமிழகத்தில் வாழ்ந்த சித்தர்களால் உருவாக்கப்பட்ட வைத்தியம். அந்தவைத்தியத்திற்குரிய நூல்கள் அனைத்தும் தமிழ் மொழியில் அமைந்துள்ளன. தமிழில் முதற்சங்கம் தோன்றியகாலத்துக்கு முன்பிருந்தே சித்த வைத்தியம் தோன்றிப்பரவியிருந்தாக மொழி நூல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.பதினெண் சித்தர்களும் சிறந்த அறிவியல் மேதைகளாய்த் திகழ்ந்தவர்கள்.இவர்கள் அனைவருமேஅண்டத்திலுள்ளதே பிண்டம் என்னும் கொள்கையினர்.அண்டத்திலுள்ளதே பிண்டம்பிண்டத்திலுள்ளதே அண்டம்அண்டமும் பிண்டமும் ஒன்றேஅறிந்துதான் பார்க்கும் போதே- திருமூலர்-.தமிழ் உலகம்

தமிழ் சித்த மருத்துவம்.


சித்த வைத்தியம் தமிழ் வைத்தியமாகும். தொன்மையுள் தொன்மையான, நம் தமிழர்க்கே உரிய தனிச்
சிறப்பு வாய்ந்தது. தமிழ் நாட்டுப் பண்டைச் சித்தர்கள் இதனைத் தமிழ் மொழியில் உருவாக்கித்
தந்துள்ளார்கள். உண்மைத் தவநெறியில் பிறழாது உன்னத நிலையில் வாழ்ந்த சித்தர்கள் தங்கள் அருள் ஞான
அறிவால் அதனை நன்குணர்ந்து மிகவும் துல்லியமாக கூறியுள்ளனர். அவர்கள் கூற்றுக்கள் அனுமானங்கள், அல்ல;
மறுக்கமுடியாத அனுபவ உண்மைகள். நாளுக்கு நாள் மாறக்கூடியவைகள் அல்ல; நாள் எல்லைக்குள்ளும் நாழிகை
வரையறைக்குள்ளும் தீர்க்கக் கூடியவை.

இயற்கையில் கிடைக்ககூடிய எண்ணற்ற புல், பூண்டு,மரம்,செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு,
காய், பழம், வித்து, முதலியவைகளைத் கொண்டும்,

நவரத்தின, நவலோகங்களைக் கொண்டும்,

இரசம், கந்தகம், கற்பூரம், தாரம், அயம், பவளம், துருசு முதலியவைகளைக் கொண்டும், திரிகடுகு,
திரிசாதி, திரிபலை, அரிசி வகை, பஸ்பம், செந்தூரம், மாத்திரை, கட்டுகள், பொடிகள்,
குளித்தைலங்கள், கஷாயங்கள் முதலிய பல பிரிவு வகைகளாக வியாதிகளுக்கு,

நல்ல தண்ணீர், கடல் நீர், ஊற்று நீர், கிணற்று நீர், முதலிய
பல நீர் வகைகளைக் கொண்டும்,

பால், தேன், சீனி, நெய், சீனி, முதலியக் கொண்டும்,

தெங்கு, புங்கு,புண்ணை,வேம்பு, எள் முதலிய தாவர எண்ணெய் வகைகளைக்கொண்டும் உருவாக்கப்பட்ட ஓர்
மருத்துவ முறையாகும்.

வீரமும், தீரமும், அருளும், ஆண்மையும், பண்பும், பாவும், பாவலரும், இசையும்,
இசைப் போரும், அரசும், நாடும், மக்களும், மன்னரும் மருத்துவமும், சமயமும், தத்துவம் உயிர்புடன் உலவுகின்ற
காட்சியைச் சங்க இலக்கியங்களைப் படிப்பார்.புத்துணர்வும் புதுவாழ்வும் பெறத் துடிக்கும் புதுமைத் தமிழ் சங்க
இலக்கியங்களில் கிடைக்கும் மருத்துவம் ஒரு சிறந்த அறிவுப் புதையலாகும்.

சித்த மருத்துவம் சித்த வைத்தியத்துடன் நின்றுவிடுவதில்லை. சித்த மருத்துவத்தில்
சிறந்தி விளங்கும் மெஞ்ஞானம், விஞ்ஞானம், உடல் த்ததுவம், சமயம், சோதிடம், பஞ்சபட்சி,
சரம், மருந்து, மருத்துவம், பரிகாரம், போன்ற ஐயந்திரிபறக் கற்றுணர வேண்டும். சங்க இலக்கியங்களில்
மருத்துவத்திற்கு அடிப்படையான பொருள்கள் சான்றுள்ளது.

'' சோதிடம், பஞ்சபட்சி துலங்கிய
சரநூல் மார்க்கம்
கோதறு வகார வித்தை
குருமுனி ஓது பாடல்
தீதிலாக் கக்கிடங்கள்
செப்பிய கன்ம காண்டம்
ஈதெலாம் கற்றுணர்ந் தோர்
இவர்களே வைத்தியராவர்.....''
(-- சித்தர் நாடி நூல் 18 --)